தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran துவக்கி வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணியை தடாகம் சாலை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கொடியசைத்து துவக்கி வைத்தார். 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.


Coimbatore: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 தொடர்பாக 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran இன்று (23.03.2026) கொடியசைத்து துவக்கி வைத்தார். கோயம்புத்தூர் மாவட்டம், 118-கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தடாகம் சாலை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இந்நிகழ்வு நடைபெற்றது.





இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 தொடர்பாக 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தடாகம் சாலை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாநகராட்சி ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இப்பேரணியானது அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் துவங்கி தடாகம் சாலை வழியாக N.S.R சாலை சந்திப்பு வழியாக மீண்டும் அரசு தொழில்நுட்பக் கல்லூரியினை வந்தடைந்தது. இப்பேரணியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விளம்பர பதாகைகளை ஏந்தியவாறு சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.



முன்னதாக, கல்லூரி வளாகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கத்தினை மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்து, செல்ஃபி முகப்பில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.



இந்நிகழ்வுகளின் போது, மேற்கு மண்டல உதவி ஆணையர் நர்மதா, அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் Dr Manomani, உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி நகர திட்டமிடுநர் மகேந்திரன், மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன், உதவி பொறியாளர் சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், சலைத், கமலக்கண்ணன், சரண்பாண்டியன், கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...