தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran துவக்கி வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணியை தடாகம் சாலை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கொடியசைத்து துவக்கி வைத்தார். 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.


Coimbatore: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 தொடர்பாக 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran இன்று (23.03.2026) கொடியசைத்து துவக்கி வைத்தார். கோயம்புத்தூர் மாவட்டம், 118-கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தடாகம் சாலை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இந்நிகழ்வு நடைபெற்றது.





இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 தொடர்பாக 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தடாகம் சாலை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாநகராட்சி ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இப்பேரணியானது அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் துவங்கி தடாகம் சாலை வழியாக N.S.R சாலை சந்திப்பு வழியாக மீண்டும் அரசு தொழில்நுட்பக் கல்லூரியினை வந்தடைந்தது. இப்பேரணியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விளம்பர பதாகைகளை ஏந்தியவாறு சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.



முன்னதாக, கல்லூரி வளாகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கத்தினை மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்து, செல்ஃபி முகப்பில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.



இந்நிகழ்வுகளின் போது, மேற்கு மண்டல உதவி ஆணையர் நர்மதா, அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் Dr Manomani, உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி நகர திட்டமிடுநர் மகேந்திரன், மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன், உதவி பொறியாளர் சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், சலைத், கமலக்கண்ணன், சரண்பாண்டியன், கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....