வடவள்ளி அருகே ஓணம்பாளையத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் 4 அடி உயர கஞ்சா செடி கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறை செடியை பறிமுதல் செய்து 40 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது. வணிக நோக்கமா என விசாரிக்கப்படுகிறது.
Coimbatore: கோவையில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், வடவள்ளி அருகே உள்ள ஓணம்பாளையம் குடியிருப்பு பகுதியில் 4 அடி உயரம் கொண்ட கஞ்சா செடி கண்டெடுக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் நகரமான கோவையில், Bihar உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். வடவள்ளி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ஓணம்பாளையத்தில், சுமார் 40-க்கும் மேற்பட்ட Bihar மாநில குடும்பங்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் உள்ளன.
இங்கு கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, வடவள்ளி காவல்துறையினர் அந்த பகுதியில் மார்ச் 22ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, குடியிருப்பின் அருகே சுமார் 4 அடி உயரம் வளர்ந்திருந்த கஞ்சா செடியைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அந்த செடியை பறிமுதல் செய்த காவல்துறையினர், அந்த பகுதியில் தங்கியிருந்த Bihar மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 40 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த செடியை வளர்த்தது யார்? வணிக ரீதியாகவோ அல்லது சுய பயன்பாட்டிற்காகவோ இது வளர்க்கப்பட்டதா? இந்த குடியிருப்புகளில் வேறு ஏதேனும் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை நகரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை ஒழிக்க காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நடைபெற்ற இந்த பறிமுதல், வட மாநில தொழிலாளர்கள் தங்கும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு தேவை என்பதை உணர்த்துகிறது.
தொழில் நகரமான கோவையில், Bihar உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். வடவள்ளி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ஓணம்பாளையத்தில், சுமார் 40-க்கும் மேற்பட்ட Bihar மாநில குடும்பங்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் உள்ளன.
இங்கு கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, வடவள்ளி காவல்துறையினர் அந்த பகுதியில் மார்ச் 22ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, குடியிருப்பின் அருகே சுமார் 4 அடி உயரம் வளர்ந்திருந்த கஞ்சா செடியைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அந்த செடியை பறிமுதல் செய்த காவல்துறையினர், அந்த பகுதியில் தங்கியிருந்த Bihar மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 40 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த செடியை வளர்த்தது யார்? வணிக ரீதியாகவோ அல்லது சுய பயன்பாட்டிற்காகவோ இது வளர்க்கப்பட்டதா? இந்த குடியிருப்புகளில் வேறு ஏதேனும் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை நகரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை ஒழிக்க காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நடைபெற்ற இந்த பறிமுதல், வட மாநில தொழிலாளர்கள் தங்கும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு தேவை என்பதை உணர்த்துகிறது.