மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் கைது

கோவை கருமத்தம்பட்டியை அடுத்த கோதாபாளையம் பகுதியில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கான பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முருகசாமி என்பவர் இப்பள்ளியை தொடங்கி நடத்தி வந்தார்.

இப்பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். ரம்யா என்ற மாணவி கடந்த 13 ஆண்டுகளாக இப்பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை ரம்யா கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். 

அதில், பள்ளியின் தாளாளர் முருகசாமி தனக்கு மதுவை கொடுத்து கற்பழித்ததாகவும், இதனால், கருவுற்ற தன்னை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அறங்காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்ததாகவும் கூறினார்.

ரம்யாவுடன் சேர்ந்து, சுமதி என்ற பெண்ணும் முருகசாமி மீது பாலியல் புகார் அளித்தார். இது தொடர்பாக, கருமத்தம்பட்டி போலீசார் முருகசாமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் பள்ளியின் அறங்காவலர் சித்ராதேவி, மேற்பார்வையாளர் ராணி, விடுதி காப்பாளர் பரிமளா, ரேவதி மற்றும் பாபு ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். இதில், ராணி என்பவர் தலைமறைவாகிவிட்ட நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

இன்று சூலூர் தாசில்தார் பழனி முன்னிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவிகளை ஆசிரியர் பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை கொதிப்படைய செய்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...