பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். செயலர் அபர்ணா ராஜ்குமார் தலைமை வகித்தார்.


Coimbatore: பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.










கல்லூரி முதல்வர் முருகேசன் விழாவிற்கு வருகை தந்தோரை வரவேற்றார். கல்லூரியின் செயலர் அபர்ணா ராஜ்குமார் விழாவிற்கு தலைமை வகித்தார். இந்நிகழ்வில் Sri Arangasamy Naidu மேல்நிலைப் பள்ளியின் செயலர் லதா ஜெகன்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.










விழாவில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு லதா ஜெகன்நாதன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.







மாணவர்களின் சாதனைகள் பாராட்டப்பட்டு ஊக்குவிக்கப்பட்டன. கல்லூரி நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.










விழாவின் இறுதியில் கல்லூரி உதவி முதல்வர் ராஜப்பன் விழாவிற்கு வருகை தந்தோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். கல்லூரி ஆண்டு விழா மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...