ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக்கணக்குக் குழு கூட்டம் நடைபெற்றது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் இன்று (மே 10) தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்குக்குழு தலைவர் கரி.இராமசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுக்கணக்குக்குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டு அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக விவரங்களை தனிதனியே துறை வாரியாக கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்குக்குழு தலைவர் கரி.இராமசாமி திட்டப்பணிகள் தொடர்பாக கூட்டுறவுத்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கலால் துறை, தீயணைப்புத்துறை, போக்குவரத்துத்துறை, காவல்த்துறை, உயர் கல்வித்துறை, வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை, புள்ளியியல் துறை ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பொதுக்கணக்குகள் சம்பந்தமாக ஆய்வுகள் தனிதனியே ஆய்வு மேற்கொண்டார்.



இதனைத்தொடர்ந்து, இந்த துறைகளில் நிலுவையிலுள்ள தொகையை அரசுக்கு உரிய காலத்திற்குள் முறையாக செலுத்த வேண்டுமென்றும் மேலும், திட்டங்கள் தொய்வின்றி செயல்படுவதை அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். இன்று கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டதில் பணிகள் சரியாக நடைபெற்றுள்ளது. இதை பொதுக்கணக்குழு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது.

மேலும், தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி கிராமங்கள் வரை தகுதியுள்ள அனைவருக்கும் கிடைத்திடும் வன்னம் அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும். கோவை மாவட்டம் மற்ற மாவட்டங்களை விட வளர்ச்சியடைந்த மாவட்டமாக உள்ளது.

மென்மேலும் வளர அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்குக்குழு தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்குக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆஸ்டின், நா.கார்த்திக், பொன்.சரஸ்வதி, ஒ.கே.சின்னராஜ். டி.செங்குட்டுவன், சி.வி.சேகர், ஆர்.நடராஜ், முனைவர் பழனிவேல் தியாகராஜன், கி.மாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், சட்டப்பேரவை துணைச் செயலாளர்கள் பாண்டியன், ரேவதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜா மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...