மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்றும் கால்நடை அறுவை மனைகள் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Coimbatore: மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி வரும் மார்ச் 31, 2026 செவ்வாய்க்கிழமை அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மகாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு மார்ச் 31 அன்று ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அன்றைய தினத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் உக்கடம், சக்திரோடு மற்றும் போத்தனூர் ஆகிய இடங்களில் உள்ள ஆடு மற்றும் மாடு அறுவை மனைகளும் மார்ச் 31 அன்று செயல்படாது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை மீறி மார்ச் 31, 2026 செவ்வாய்க்கிழமை அன்று செயல்படும் இறைச்சி கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. மாநகராட்சி சட்ட விதிகளின்படி அபராதம் விதிப்பது, இறைச்சி மற்றும் கருவிகளை பறிமுதல் செய்வது, கடைகளை பூட்டி சீல் வைப்பது மற்றும் கடை உரிமத்தை இரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மகாவீர் ஜெயந்தி நாளில் இறைச்சி விற்பனை மற்றும் கால்நடை வதை தடை என்பது ஜெயின சமூகத்தினரின் மத நம்பிக்கைகளை மதித்து ஆண்டுதோறும் தமிழக அரசால் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும். கடை உரிமையாளர்கள் இந்த அறிவிப்பை கடைப்பிடித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோயம்புத்தூர் மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மகாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு மார்ச் 31 அன்று ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அன்றைய தினத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் உக்கடம், சக்திரோடு மற்றும் போத்தனூர் ஆகிய இடங்களில் உள்ள ஆடு மற்றும் மாடு அறுவை மனைகளும் மார்ச் 31 அன்று செயல்படாது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை மீறி மார்ச் 31, 2026 செவ்வாய்க்கிழமை அன்று செயல்படும் இறைச்சி கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. மாநகராட்சி சட்ட விதிகளின்படி அபராதம் விதிப்பது, இறைச்சி மற்றும் கருவிகளை பறிமுதல் செய்வது, கடைகளை பூட்டி சீல் வைப்பது மற்றும் கடை உரிமத்தை இரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மகாவீர் ஜெயந்தி நாளில் இறைச்சி விற்பனை மற்றும் கால்நடை வதை தடை என்பது ஜெயின சமூகத்தினரின் மத நம்பிக்கைகளை மதித்து ஆண்டுதோறும் தமிழக அரசால் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும். கடை உரிமையாளர்கள் இந்த அறிவிப்பை கடைப்பிடித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோயம்புத்தூர் மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.