காணொளி காட்சி மூலம் ரூ.28 கோடியே 51 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை தமிழக முதலமைச்சர் கோவையில் திறந்து வைத்தார்


கோவை மாவட்டத்தில் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் சுகுணாபுரம் பகுதியில் ரூ.4.33 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 64 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குறிஞ்சி நகர் திட்டப் பகுதியில் 10.69 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 160 குடியிருப்புகளையும், 1.72 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய சரக அலுவலக கட்டிடத்தையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொளி காட்சி முலம் துவக்கி வைத்தார்.



மேலும், வீட்டுவசதி வாரியம் மூலம் பொள்ளாச்சி வட்டம், சின்னம்பாளையம் கிராமத்தில் அரசு அலுவலர்களுக்கு 11.77 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 108 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகளையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொளி காட்சி மூலம் கோவையில் துவக்கி வைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக தமிழக அரசின் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பொதுமக்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...