கோவை மாவட்டத்தில் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் சுகுணாபுரம் பகுதியில் ரூ.4.33 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 64 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குறிஞ்சி நகர் திட்டப் பகுதியில் 10.69 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 160 குடியிருப்புகளையும், 1.72 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய சரக அலுவலக கட்டிடத்தையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொளி காட்சி முலம் துவக்கி வைத்தார்.

மேலும், வீட்டுவசதி வாரியம் மூலம் பொள்ளாச்சி வட்டம், சின்னம்பாளையம் கிராமத்தில் அரசு அலுவலர்களுக்கு 11.77 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 108 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகளையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொளி காட்சி மூலம் கோவையில் துவக்கி வைத்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக தமிழக அரசின் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பொதுமக்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தனர்.