மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்களின் விலை 10% உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


Coimbatore: கோயம்புத்தூர் குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின் (COSMAFAN) தலைவர் சிவசண்முககுமார் கூறும் போது,

சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடந்தது.

கடந்த 45 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் வார்ப்பட ( Foundry) தொழிலின் வளர்ச்சிக்காக காஸ்மாபேன் சங்கம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சங்கத்தில் 400-க்கும் மேற்பட்ட குறு மற்றும் சிறு பவுண்டரிகள் உறுப்பினர்களாக உள்ளன. இத்தொழில் மூலம் நேரடியாக 2 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்களும் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

ஆண்டுதோறும் சுமார் 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறுகிறது.

கடந்த சில மாதங்களாக பவுண்டரி தொழிலுக்குத் தேவையான அடிப்படை மூலப்பொருட்களின் விலை 20 சதவீதம் வரையிலும், இதர துணைப் பொருட்களின் (Allied Materials) விலை 20% முதல் 40% வரையிலும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தச் சீரற்ற விலை ஏற்றத்தினால் சிறு மற்றும் குறு பவுண்டரிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாத இக்கட்டான சூழல் நிலவுகிறது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக, பவுண்டரிகளில் உற்பத்தி செய்யப்படும் 'காஸ்டிங்' (Casting) பொருட்களின் விலையை, தற்போதுள்ள விலையிலிருந்து 10% உயர்த்துவது எனச் சங்கம் ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது.

பவுண்டரி தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலப்பொருட்கள் மற்றும் துணைப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசூர் மற்றும் மாணிக்கம்பாளையம் பவுண்டரி கிளஸ்டர்களில் அரசு சார்பில் 'மூலப்பொருள் வங்கி' (Raw Material Bank) அமைத்துத் தர வேண்டும். குறு பவுண்டரிகளுக்கான ஜிஎஸ்டி (GST) வரியை தற்போதைய 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், பவுண்டரி தொழிலையும் பாதுகாக்க முடியும்.

என்றார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...