குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பலத்த சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில், நீலகிரி, குன்னூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது.

இதில், உதகை மலை ரயில் தடத்திலும் மண்சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ரயில்வேத்துறை அதிகாரிகள் உதகை ரயில் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை பொக்லைன் மூலம் அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, சீரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் தண்டவாளத்தில் விழுந்த மரத்தில் மோதிய சரக்கு ரயிலால் இருவர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் மலை ரயில் இயக்கப்படாததால் முன்பதிவு செய்த சுற்றுலா பயணிகள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது, பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருவதால் நாளை முதல் மலை ரயில் சேவை துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில், உதகை மலை ரயில் தடத்திலும் மண்சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ரயில்வேத்துறை அதிகாரிகள் உதகை ரயில் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை பொக்லைன் மூலம் அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, சீரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் தண்டவாளத்தில் விழுந்த மரத்தில் மோதிய சரக்கு ரயிலால் இருவர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் மலை ரயில் இயக்கப்படாததால் முன்பதிவு செய்த சுற்றுலா பயணிகள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது, பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருவதால் நாளை முதல் மலை ரயில் சேவை துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.