கோவை வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடும் வறட்சியினைத் தொடர்ந்து, வன உயிரினங்களுக்கு தாது உப்பு சக்தி கொண்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என கோவை மாவட்ட வன அலுவலர் ராம சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் 7 வன சரகங்கள் உள்ளன. கோவை வனப்பகுதி 790 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாத காரணத்தால் அனைத்து பகுதிகளிலும் வறட்சி நிலவிவருகிறது. வன உயிரினங்களுக்கு பல்வேறு பகுதிகளில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் லிட்டர் முதல் 10 ஆயிரம் லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டிகள் கடந்த 3 வருடங்களுக்கு முன்னரே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அவையனைத்தும் தற்போது நல்ல நிலையில் உள்ளன.
ஒவ்வொரு வன சரகத்திலும் குறைந்தது 7 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் அனைத்து உரினங்களும் இங்கு வந்து குடிநீர் அருந்தி செல்கின்றன. மழை பெய்தால் தான் வன உயிரிகள் வாழும்.
வனப் பகுதியை சுற்றி இருக்கும் கிராமத்திலுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கால்நடைகளும் வன உயிரினங்களும் வனத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் வந்து நீர் அருந்துவதால் தற்போது வனவிலங்குகள் அருந்தும் குடிநீரில் நோய் தடுப்பு மருந்துகள் கலக்கப்பட்டு வனத்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளில் இருந்து வன உயினரினங்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் தடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வறட்சியால் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளது. வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் காட்டு தீ கண்காணிப்பாளர்கள் வனப்பகுதிக்குள் ரோந்து செல்கின்றனர். இதனால், காட்டுத் தீ பரவாமல் உள்ளது.
அதிகப்படியான வெயில் மற்றும் வறட்சியினை வனவிலங்குகள் தாங்கும் வகையில் அதிகப்படியான நீர் ஆதாரங்களும், தாது உப்பு சக்தி கொண்ட பொருட்களையும் வைத்துள்ளோம். இதனால் வன உயிரினங்கள் ஆரோக்கியமாக இருக்கும்" இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் 7 வன சரகங்கள் உள்ளன. கோவை வனப்பகுதி 790 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாத காரணத்தால் அனைத்து பகுதிகளிலும் வறட்சி நிலவிவருகிறது. வன உயிரினங்களுக்கு பல்வேறு பகுதிகளில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் லிட்டர் முதல் 10 ஆயிரம் லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டிகள் கடந்த 3 வருடங்களுக்கு முன்னரே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அவையனைத்தும் தற்போது நல்ல நிலையில் உள்ளன.
ஒவ்வொரு வன சரகத்திலும் குறைந்தது 7 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் அனைத்து உரினங்களும் இங்கு வந்து குடிநீர் அருந்தி செல்கின்றன. மழை பெய்தால் தான் வன உயிரிகள் வாழும்.
வனப் பகுதியை சுற்றி இருக்கும் கிராமத்திலுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கால்நடைகளும் வன உயிரினங்களும் வனத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் வந்து நீர் அருந்துவதால் தற்போது வனவிலங்குகள் அருந்தும் குடிநீரில் நோய் தடுப்பு மருந்துகள் கலக்கப்பட்டு வனத்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளில் இருந்து வன உயினரினங்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் தடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வறட்சியால் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளது. வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் காட்டு தீ கண்காணிப்பாளர்கள் வனப்பகுதிக்குள் ரோந்து செல்கின்றனர். இதனால், காட்டுத் தீ பரவாமல் உள்ளது.
அதிகப்படியான வெயில் மற்றும் வறட்சியினை வனவிலங்குகள் தாங்கும் வகையில் அதிகப்படியான நீர் ஆதாரங்களும், தாது உப்பு சக்தி கொண்ட பொருட்களையும் வைத்துள்ளோம். இதனால் வன உயிரினங்கள் ஆரோக்கியமாக இருக்கும்" இவ்வாறு அவர் கூறினார்.