வறட்சி காலத்தில் வன உயிரினங்களை பாதுகாக்க வனப்பகுதிக்குள் தாதுஉப்பு சத்து உணவுகள் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது- கோவை மாவட்ட வன அலுவலர் பேட்டி

கோவை வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடும் வறட்சியினைத் தொடர்ந்து, வன உயிரினங்களுக்கு தாது உப்பு சக்தி கொண்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என கோவை மாவட்ட வன அலுவலர் ராம சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் 7 வன சரகங்கள் உள்ளன. கோவை வனப்பகுதி 790 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாத காரணத்தால் அனைத்து பகுதிகளிலும் வறட்சி நிலவிவருகிறது. வன உயிரினங்களுக்கு பல்வேறு பகுதிகளில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் லிட்டர் முதல் 10 ஆயிரம் லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டிகள் கடந்த 3 வருடங்களுக்கு முன்னரே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அவையனைத்தும் தற்போது நல்ல நிலையில் உள்ளன.

ஒவ்வொரு வன சரகத்திலும் குறைந்தது 7 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் அனைத்து உரினங்களும் இங்கு வந்து குடிநீர் அருந்தி செல்கின்றன. மழை பெய்தால் தான் வன உயிரிகள் வாழும்.

வனப் பகுதியை சுற்றி இருக்கும் கிராமத்திலுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

கால்நடைகளும் வன உயிரினங்களும் வனத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் வந்து நீர் அருந்துவதால் தற்போது வனவிலங்குகள் அருந்தும் குடிநீரில் நோய் தடுப்பு மருந்துகள் கலக்கப்பட்டு வனத்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளில் இருந்து வன உயினரினங்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் தடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வறட்சியால் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளது. வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் காட்டு தீ கண்காணிப்பாளர்கள் வனப்பகுதிக்குள் ரோந்து செல்கின்றனர். இதனால், காட்டுத் தீ பரவாமல் உள்ளது.

அதிகப்படியான வெயில் மற்றும் வறட்சியினை வனவிலங்குகள் தாங்கும் வகையில் அதிகப்படியான நீர் ஆதாரங்களும், தாது உப்பு சக்தி கொண்ட பொருட்களையும் வைத்துள்ளோம். இதனால் வன உயிரினங்கள் ஆரோக்கியமாக இருக்கும்" இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...