வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் கைது

நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் அவமதிக்கப்பட்டதை கண்டித்து கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீட் தேர்வின் போது விதிமுறைகள் என்ற பெயரில் மாணவ, மாணவிகள் அலைகழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக கேரளாவில் மாணவி ஒருவரின் உள்ளாடை சோதனை என்ற பெயரில் அகற்றப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும், தேர்விற்கு முழுக்கை சட்டை அணிந்து சென்ற மாணவர்களின் சட்டைகள் வெட்டப்பட்டன. மேலும், நீட் வினாத்தாள்  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு ஒரு மாதிரியாக இருந்ததாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இந்நிலையில், மாணவர்களை மன உளச்சலுக்கு ஆளாக்கிய மத்திய அரசை கண்டித்து கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

அப்போது மாணவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து வருமான வரித்துறை அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து போராடிய இந்திய மாணவர் சங்கத்தினர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், நீட் தேர்வின் போது மாணவர்களை மன அழுத்திற்கு உள்ளாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...