நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் அவமதிக்கப்பட்டதை கண்டித்து கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீட் தேர்வின் போது விதிமுறைகள் என்ற பெயரில் மாணவ, மாணவிகள் அலைகழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக கேரளாவில் மாணவி ஒருவரின் உள்ளாடை சோதனை என்ற பெயரில் அகற்றப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மேலும், தேர்விற்கு முழுக்கை சட்டை அணிந்து சென்ற மாணவர்களின் சட்டைகள் வெட்டப்பட்டன. மேலும், நீட் வினாத்தாள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு ஒரு மாதிரியாக இருந்ததாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், மாணவர்களை மன உளச்சலுக்கு ஆளாக்கிய மத்திய அரசை கண்டித்து கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
அப்போது மாணவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து வருமான வரித்துறை அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து போராடிய இந்திய மாணவர் சங்கத்தினர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், நீட் தேர்வின் போது மாணவர்களை மன அழுத்திற்கு உள்ளாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
நீட் தேர்வின் போது விதிமுறைகள் என்ற பெயரில் மாணவ, மாணவிகள் அலைகழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக கேரளாவில் மாணவி ஒருவரின் உள்ளாடை சோதனை என்ற பெயரில் அகற்றப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மேலும், தேர்விற்கு முழுக்கை சட்டை அணிந்து சென்ற மாணவர்களின் சட்டைகள் வெட்டப்பட்டன. மேலும், நீட் வினாத்தாள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு ஒரு மாதிரியாக இருந்ததாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், மாணவர்களை மன உளச்சலுக்கு ஆளாக்கிய மத்திய அரசை கண்டித்து கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
அப்போது மாணவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து வருமான வரித்துறை அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து போராடிய இந்திய மாணவர் சங்கத்தினர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், நீட் தேர்வின் போது மாணவர்களை மன அழுத்திற்கு உள்ளாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.