வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.


கோவை:கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், காலில் ஏற்பட்ட புண் காரணமாக சிகிச்சை பெற்று வந்த வானதி சீனிவாசன், பூரண குணமடைந்து நாளை வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி, இன்று ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு வானதி சீனிவாசன் வீடு திரும்பியுள்ளார்.

மருத்துவமனையிலிருந்து நேரடியாக தொண்டாமுத்தூர் அருகே உள்ள உலியம்பாளையத்தில் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். அங்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழித்து அவரை வீட்டிற்குள் வரவேற்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு உடல்நலம் தேறி வீடு திரும்பிய வானதி சீனிவாசனுக்கு உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் வீட்டிலுள்ள பூஜை அறையில் சாமி கும்பிட்டு வேண்டுதல் நிறைவேற்றினார். அவரது பூரண நலனுக்காக குடும்பத்தினரும் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.

சிகிச்சைக்குப் பிறகு விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. நாளை பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகை தர உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே வானதி சீனிவாசன் வீடு திரும்பியது பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...