தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் மே 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.
பயிற்சிகள் வழங்கப்படும் தலைப்புகள்:-
1. நெல்லி பானங்கள்- பழரச பானம் மற்றும் தயார் நிலை பானம்.
2. நெல்லி ஜாம், அல்வா மற்றும் பட்டர்.
3. கேண்டி மிட்டாய், பொடி மற்றும் துருவல்.
4. தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்வதற்குரிய வழிமுறைகள்.
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1500 செலுத்தி தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து கொள்ள இறுதி நாள் மே 16-ம் தேதி ஆகும்.
இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை. 0422-6611340 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்.