கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார். சிறந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


Coimbatore: கோவை, துடியலூர் வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32 வது ஆண்டு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு எஸ். என் .ஆர் சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் எஸ் .நரேந்திரன் தலைமை தாங்கினார்.கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ.சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்று கல்லூரி அடைந்த வளர்ச்சிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்களின் கல்வி விளையாட்டு மற்றும் ஆராய்ச்சித் துறையில் பெற்ற சாதனைகளை பட்டியலிட்டு ஆண்டறிக்கை வாசித்தார். 



சிறப்பு விருந்தினராக, தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கலந்துகொண்டார். அவரது ஊக்கமளிக்கும் உரையில், அவர் மாணவர்களை தங்களை மறுவடிவமைக்கவும், நம்பிக்கையுடன் இருக்கவும், பெற்றோருக்கு நன்றியுள்ளவர்களாகவும், வாழ்நாள் முழுவதும் கற்றல் பயணத்தைத் தழுவவும் ஊக்குவித்தார், ஆர்வம், தன்னம்பிக்கை, அறிவு, தகவல் தொடர்பு திறன் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு அத்தியாவசியமான குணங்களாக அவர் எடுத்துரைத்தார். சர் ஐசக் நியூட்டன், டார்வின் மற்றும் சாக்ரடீஸ் போன்ற சிறந்த ஆளுமைகளின் உத்வேகத்தைப் பெற்ற அவர், ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் மனித முன்னேற்றத்தின் அடித்தளம் என்பதை மாணவர்களுக்கு நினைவூட்டினார். பண்புகளை வளர்க்கும் பல்வேறு செயல்களில் ஈடுபடவும், புதிய வாய்ப்புகளை வரவேற்க திறந்த மனதுடன் இருக்கவும், கற்றல் சக்தியின் மூலம் தங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு உதவ தங்கள் அறிவையும் திறமையையும் பயன்படுத்த வேண்டும் என்று ஆர்வத்துடன் மாணவர்களை வலியுறுத்தினார்.



மேலும் , இக்கல்லூரியை பற்றியதகவல்கள், கல்லூரி அடைந்த தொழில் நுற்ப வளர்ச்சி ,கல்லூரியில் அமைந்திருக்கும் ஆராய்ச்சி கூடங்கள் பற்றிய தரவு வெளியிட்டு விழா நடைபெற்றது.

கல்லூரியின் விழா மலரை சிறப்பு விருந்தினர் வெளியிட நிர்வாக அறங்காவலர் பெற்றுக்கொண்டார். விழாவின் ஒரு பகுதியாக கல்லூரியில் 25 ஆண்டுகள் பணியாற்றிதுவக்க நாள் முதல் சிறப்பாக சேவையாற்றி வரும்பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களும், காப்புரிமை பெற்று சாதனை படைத்த பேராசிரியர்களும், சிறந்த ஆராய்ச்சி புரிந்தபேராசிரியர்களும் சிறந்த என்சிசி கேடட் விருது ,என்.எஸ்.எஸ் சிறந்த தன்னார்வலர் விருது சிறந்த புதுமைகண்டுபிடிப்புகள் , கலைத்துறையின் சாதனைகள்புரிந்தவர்களுக்குபரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



கல்வியாண்டில் கல்வி விளையாட்டு மற்றும் அனைத்து ஊக்க திறன் மேம்பாடு துறைகளில் சிறப்பாக செயல் புரிந்தமைக்காக தங்கப்பதக்கம் மற்றும் சுழற்கோப்பையுடன் சிறந்த மாணவர் விருது எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையை சார்ந்த மாதேஷ் என்ற மாணவருக்கும் ,பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறையை சார்ந்தஷர்மிளா என்ற மாணவிக்கும் வழங்கப்பட்டது. 

இறுதியில் எலெக்ட்ரிக்கல் அண்ட்எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் பேராசிரியர்அல்லிராணி நன்றி கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...