ஏடிஎம்மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து கணக்கில் உள்ள பணத்தை மீட்க நாடு முழுவதும் ஏடிஎம்-களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட நவம்பர் முதல் வெளியாகும் ஒவ்வொரு அறிவிப்புகளும் பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துக் கொண்டிருக்கிறது. இதன் அதிகபட்சமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வங்கிக் கணக்கில் கட்டாயம் 5 ஆயிரம் ரூபாய் வரை பேலன்ஸ் இருக்க வேண்டும் என அறிவித்தது.
இந்நிலையில், ஜூன் 1-ந் தேதி முதல் ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. அத்துடன் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றினாலும் கட்டணம் வசூலிப்போம் என்று கூறியுள்ளது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா.
இந்த அறிவிப்புகள் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்களில் நீண்ட கியூ வரிசையில் மக்கள் இன்றே நிற்க தொடங்கி விட்டனர்.
இதனிடையே இந்த சுற்றறிக்கையை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் உறுதியான தகவல் வெளியாகாததால் குழப்பம் நீடித்து வருகிறது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட நவம்பர் முதல் வெளியாகும் ஒவ்வொரு அறிவிப்புகளும் பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துக் கொண்டிருக்கிறது. இதன் அதிகபட்சமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வங்கிக் கணக்கில் கட்டாயம் 5 ஆயிரம் ரூபாய் வரை பேலன்ஸ் இருக்க வேண்டும் என அறிவித்தது.
இந்நிலையில், ஜூன் 1-ந் தேதி முதல் ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. அத்துடன் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றினாலும் கட்டணம் வசூலிப்போம் என்று கூறியுள்ளது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா.
இந்த அறிவிப்புகள் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்களில் நீண்ட கியூ வரிசையில் மக்கள் இன்றே நிற்க தொடங்கி விட்டனர்.
இதனிடையே இந்த சுற்றறிக்கையை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் உறுதியான தகவல் வெளியாகாததால் குழப்பம் நீடித்து வருகிறது.