தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து நீராடி மகிழ்ந்தனர். 39 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெற்றனர்.


Coimbatore: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ம் தேதி நடைபெற்ற நிலையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாத்தலம் ஒரு நாள் மூடப்பட்டிருந்தது. Coimbatore மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தளங்களில் ஒன்றான இந்த இடம், தேர்தல் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பொதுமக்கள் வரவால் களைகட்டியது.

Coimbatore மக்கள் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்கள் மற்றும் வெளி மாநில மக்களும் கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் நீராடி மகிழ்ந்தனர். இங்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பாலிதீன் கவர்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாவுக்கு வந்த பொதுமக்களின் உடமைகள் வனத்துறையினரால் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

Coimbatore நகரில் சுமார் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் சுட்டெரிக்கும் நிலையில், கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் குடும்பத்தினருடன் நீராடி பொதுமக்கள் உற்சாகமடைந்தனர். கடும் வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெற குளிர்ந்த நீரில் நீராடுவது இனிமையான அனுபவமாக இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.

நீர் வரத்து குறைவாக இருந்தபோதிலும், வெப்பத்தை தணிக்கும் வகையில் நீராடியதும், வனபகுதிக்குள் டிரெக்கிங் சென்றதும் நல்ல அனுபவத்தைக் கொடுத்ததாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்காணித்தனர்.

தேர்தல் நாளன்று மூடப்பட்டிருந்த சுற்றுலாத்தலம் மீண்டும் திறக்கப்பட்டதும், ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து பெரும் கூட்டம் குவிந்தது. குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...