2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்த மே 3ஆம் தேதி நடத்தப்பட்ட NEET (UG) தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.


Coimbatore: நாடு முழுவதும் கடந்த மே 3ஆம் தேதி நடத்தப்பட்ட NEET (UG) தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான NEET தேர்வு நாடு முழுவதும் மே 3ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தற்போது அந்தத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் பல மாநிலங்களில் எழுந்ததைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற NEET தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முடிவு, தேர்விற்காக பல மாதங்கள் தீவிரமாக தயாராகியிருந்த மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மறு தேர்வு நடத்தப்படுவது மாணவர்களிடம் கூடுதல் மன அழுத்தத்தையும், மருத்துவக் கல்லூரி சேர்க்கை செயல்முறையில் தாமதத்தையும் ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது..

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...