கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்கு பிறகு தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


Coimbatore: தமிழ்நாட்டில் நடைபெற்ற 17வது சட்டமன்றத் தேர்தலில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட கனிமொழி சந்தோஷ், ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 466 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.



இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற அவர், தவெக-வின் பெரும்பான்மையை நிரூபிக்கும் நிகழ்விலும் பங்கேற்றார். தற்போது, சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று அவர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பங்கேற்றார்.

கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையத்தில் தொடங்கி சித்ரா, காளப்பட்டி, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, துடியலூர், ஜி.என்.மில்ஸ், கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், கணுவாய், தடாகம், நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக பெரியநாயக்கன்பாளையம் வரை பொதுமக்களை சந்தித்து வாக்களித்ததற்காக நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், தனது வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் மற்றும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், “கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் தேவைகளுக்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என உறுதியளித்தார்.


Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...