கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கைதிகள் உட்பட 4 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை மத்திய சிறையில் மகேஷ் @ மகேந்திரன் (26), சுராளி @ சுரேந்திரன் (22), கலாநிதி @ அபிவிஷ்ணு (27) ஆகியோர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்திப்பதற்காக சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து அனுமதி பெற்றிருந்தார்.
அதன்படி, கடந்த 12ஆம் தேதி கோவை மத்திய சிறைக்கு வந்த நவீன், கைதிகளுக்கு வழங்குவதற்காக வர்க்கி உள்ளிட்ட தின்பண்டங்களை கொண்டு வந்துள்ளார். அவற்றை மகேஷ் @ மகேந்திரனிடம் வழங்குமாறு கூறி சிறைக் காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.
சிறை விதிமுறைகளின்படி, கைதிகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது வர்க்கி பாக்கெட்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6.24 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து கோவை மத்திய சிறை ஜெயிலர் திருமலை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், NDPS சட்டம் மற்றும் சிறைச்சாலை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கஞ்சா கடத்த முயன்ற நவீன் மற்றும் அதை பெற முயன்ற கைதிகள் மகேஷ் @ மகேந்திரன், சுராளி @ சுரேந்திரன், கலாநிதி @ அபிவிஷ்ணு ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மத்திய சிறையில் மகேஷ் @ மகேந்திரன் (26), சுராளி @ சுரேந்திரன் (22), கலாநிதி @ அபிவிஷ்ணு (27) ஆகியோர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்திப்பதற்காக சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து அனுமதி பெற்றிருந்தார்.
அதன்படி, கடந்த 12ஆம் தேதி கோவை மத்திய சிறைக்கு வந்த நவீன், கைதிகளுக்கு வழங்குவதற்காக வர்க்கி உள்ளிட்ட தின்பண்டங்களை கொண்டு வந்துள்ளார். அவற்றை மகேஷ் @ மகேந்திரனிடம் வழங்குமாறு கூறி சிறைக் காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.
சிறை விதிமுறைகளின்படி, கைதிகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது வர்க்கி பாக்கெட்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6.24 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து கோவை மத்திய சிறை ஜெயிலர் திருமலை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், NDPS சட்டம் மற்றும் சிறைச்சாலை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கஞ்சா கடத்த முயன்ற நவீன் மற்றும் அதை பெற முயன்ற கைதிகள் மகேஷ் @ மகேந்திரன், சுராளி @ சுரேந்திரன், கலாநிதி @ அபிவிஷ்ணு ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.