கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போத்தனூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
Coimbatore: கோவை வெள்ளலூர் Housing Unit பகுதியை சேர்ந்த சந்தோஷ் (29) கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை போத்தனூர் கருப்பராயன் கோயில் அருகே உள்ள கிரீன் பார்க் பகுதியில் ஒரு வீட்டின் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சந்தோஷ் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் அவசரமாக கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, பரிசோதித்த மருத்துவ உதவியாளர் சந்தோஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போத்தனூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த திடீர் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சந்தோஷ் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் அவசரமாக கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, பரிசோதித்த மருத்துவ உதவியாளர் சந்தோஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போத்தனூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த திடீர் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.