கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் நலப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Coimbatore: பீளமேடு முருகன் கோயில் வீதியில் உள்ள நியாய விலை கடையைப் பார்வையிட்ட அவர், பொதுமக்களுக்குப் பொருட்கள் அனைத்தும் சரியாகக் கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். 



தொடர்ந்து, பீளமேடு அவிநாசி பிரதான சாலை EB அலுவலகம் முன்பு சாலையோரத்தில் இருந்த குப்பைகள் சுத்தம் செய்யப்பட்ட பணியைப் பார்வையிட்டு, அங்கு பொதுமக்கள் குப்பை கொட்டுவதைத் தவிர்க்க 'விழிப்புணர்வு பிளக்ஸ்' வைக்குமாறு வார்டு சூப்பர்வைசருக்கு அறிவுறுத்தினார்.



மேலும், பாரதி காலனி 4-வது வீதி மற்றும் கோபால் நகர் ஆகிய பகுதிகளில் தினசரி குப்பை வாங்கும் தள்ளுவண்டி மற்றும் ஆட்டோக்கள் சரியாக வருகிறதா என ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்து வழங்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்திய அவர், சாலையோர மரக்கழிவுகளைத் தினசரி சுத்தம் செய்யத் தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். 



அதனைத் தொடர்ந்து, சாந்தி நகர் பகுதியில் நடைபெற்ற சாக்கடை தூய்மைப் பணிகளை நேரில் பார்வையிட்டு, சாக்கடையை முழுமையாகச் சுத்தம் செய்ய உத்தரவிட்டார். 



இந்த ஆய்வுகளின் போது நியாய விலை கடை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் செந்தில்குமார் (27அ வட்ட பொறுப்பாளர்), தேவி (BLA2) உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...