கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்தது. இதில் கார், வீடு மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்ததுடன், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது.


Coimbatore: அக்னி நட்சத்திர வெயிலால் கடந்த சில நாட்களாக மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பரவலாக காற்றுடன் மழை பெய்து வருகிறது.



இந்நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், பன்னீர்மடை, தடாகம், இடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.



சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கனமழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்களும் பதிவாகின.



குறிப்பாக, அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய வேப்பமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார், வீட்டு பகுதி மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்தன. மரம் விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள், மரத்தை அகற்றும் பணியிலும் மின் இணைப்பை சீரமைக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...