கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கம் (OSMA) சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


Coimbatore: ஜவுளித் தொழில் சார்ந்த தொழில் முனைவோருடன் மத்திய ஜவுளித்துறை ஆணையர் விருந்தா மனோகர் தேசாய் கலந்துரையாடிய நிகழ்ச்சி வியாழக்கிழமை கோவையில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கத்தின் (OSMA) நிர்வாகிகள், மத்திய ஜவுளித்துறை கமிஷனரிடம் கோரிக்கை மனு அளித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தினர்.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் அருள்மொழி கூறுகையில், “கழிவுப்பஞ்சு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஓபன் எண்ட் மில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, கழிவுப்பஞ்சு ஏற்றுமதிக்கு வரி விதித்து அதன் ஏற்றுமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்,” என்றார்.

மேலும், “ஓபன் எண்ட் (OE) நூல்களுக்கு தனி ‘HSN Code’ வழங்க வேண்டும் என்பதையும் மத்திய ஜவுளித்துறை கமிஷனரிடம் வலியுறுத்தியுள்ளோம்,” என்றும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் சங்க நிர்வாகிகள் முருகேசன், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...