கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோடை விடுமுறையையொட்டி பயணிகளின் வசதிக்காக போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.




இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோடை விடுமுறை காலத்தில் அதிகரித்துள்ள பயணிகள் நெரிசலைக் கருத்தில் கொண்டு போத்தனூர் - சென்னை சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை தொடர்ந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




அதன்படி, மே 20 முதல் ஜூன் 5 வரை வாரத்தில் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் போத்தனூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும் போத்தனூர் - சென்னை சிறப்பு விரைவு ரயில் (எண்: 06028) அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தை அடையும். மறுபயணமாக, மே 20 முதல் ஜூன் 5 வரை புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படும் சென்னை - போத்தனூர் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06027) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூரை வந்தடையும்.




இந்த சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறையில் சென்னை செல்லும் பயணிகளுக்கு இந்த சேவை பெரும் வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...