கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு முடிந்ததும், மதுபானங்கள் பீளமேடு மண்டல குடோனுக்கு மாற்றப்பட உள்ளன.


Coimbatore:

கோவை: கோவை மாவட்டத்தில் மொத்தம் 254 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. புதிதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழக அரசு, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும் 69 கடைகள் மூடப்பட்டுள்ளன.

முதல் நாளில் 4 கடைகள், இரண்டாம் நாளில் 10 கடைகள் மூடப்பட்ட நிலையில், நேற்று மீதமிருந்த 55 கடைகளும் மூடப்பட்டன.

இந்த நிலையில், மூடப்பட்ட கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில்:

“கோவை மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காக டாஸ்மாக் வடக்கு மற்றும் தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை வடக்கில் 156 கடைகளும், தெற்கில் 128 கடைகளும் என மொத்தம் 254 கடைகள் செயல்பட்டு வந்தன. தற்போது வடக்கில் 48 கடைகளும், தெற்கில் 21 கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் இனி மாவட்டத்தில் 215 டாஸ்மாக் கடைகள் மட்டுமே செயல்படும். மேலும், மூடப்பட்ட கடைகளுடன் இணைந்து செயல்பட்டு வந்த 50 பார்களும் மூடப்பட்டுள்ளன.

மூடப்பட்ட 69 கடைகளிலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பில் உள்ளன. அந்த இருப்புகளை கணக்கெடுக்கும் பணியில் ஒவ்வொரு கடைக்கும் இரண்டு பேர் வீதம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததும், அந்த மதுபானங்கள் பீளமேட்டில் உள்ள மண்டல டாஸ்மாக் மேலாளர் குடோனுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும்” என்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...