கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி ஹெல்மெட்டுகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.


Coimbatore: இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) கோயம்புத்தூர் அலுவலகத்தின் சார்பில், தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க கண்காணிப்பு மற்றும் திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இயக்குனர் கே.ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் வினித் குமார், திவ்யா மற்றும் கௌதம் சாந்த் சோனி உள்ளிட்ட குழுவினர் கோவையில் உள்ள ஒரு ஹெல்மெட் விற்பனை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் ஹெல்மெட்டுகளை பரிசோதித்ததில், ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தரமற்ற ஹெல்மெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், தரச்சான்று இல்லாத ஹெல்மெட்டுகளை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக BIS சட்டம் 2016-ன் பிரிவு 28ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்களுக்கு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து BIS அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் எந்த பொருளையும் வாங்கும் முன் அதன் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக ஹெல்மெட்டுகளில் ஐஎஸ்ஐ முத்திரை உள்ளதா என்பதை கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

மேலும், BIS CARE செயலியின் மூலம் பொருட்களின் தரச் சான்றுகளை சரிபார்த்து வாங்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...