கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி ஹெல்மெட்டுகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.


Coimbatore: இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) கோயம்புத்தூர் அலுவலகத்தின் சார்பில், தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க கண்காணிப்பு மற்றும் திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இயக்குனர் கே.ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் வினித் குமார், திவ்யா மற்றும் கௌதம் சாந்த் சோனி உள்ளிட்ட குழுவினர் கோவையில் உள்ள ஒரு ஹெல்மெட் விற்பனை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் ஹெல்மெட்டுகளை பரிசோதித்ததில், ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தரமற்ற ஹெல்மெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், தரச்சான்று இல்லாத ஹெல்மெட்டுகளை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக BIS சட்டம் 2016-ன் பிரிவு 28ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்களுக்கு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து BIS அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் எந்த பொருளையும் வாங்கும் முன் அதன் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக ஹெல்மெட்டுகளில் ஐஎஸ்ஐ முத்திரை உள்ளதா என்பதை கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

மேலும், BIS CARE செயலியின் மூலம் பொருட்களின் தரச் சான்றுகளை சரிபார்த்து வாங்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...