“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக மூடக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எளிய கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில், டாஸ்மாக் கடை காரணமாக பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக பெண்கள் குற்றம்சாட்டினர்.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில்,

“கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்த டாஸ்மாக் கடையில் மது அருந்தியதால் ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு மற்றும் போதை விபத்துகளில் சிக்கி பல ஆண்கள் உயிரிழந்துள்ளனர்” என வேதனையுடன் தெரிவித்தனர்.

“எனவே, பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வர காரணமான உள்ளடாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்” என முழக்கமிட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கடையை அகற்றுவது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பெண்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இருப்பினும், டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்படாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அத்தப்பகவுண்டன்புதூர் பகுதி பெண்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...