Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடக்கோரி பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் (மார்க்சிஸ்ட்) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : கோவை தடாகம் சாலை கோவில்மேடு பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக அகற்றக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் கடைகள் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு அருகில் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுபோதையில் வரும் சிலர் சாலையில் தகராறு செய்வதும், ரோட்டில் விழுந்து கிடப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இதனால் மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அப்பகுதியில் பல்வேறு கோவில்களும் உள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மூடவுள்ளதாக அறிவித்துள்ள 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியலில் இந்த இரண்டு கடைகளையும் சேர்த்து உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் கடைகள் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு அருகில் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுபோதையில் வரும் சிலர் சாலையில் தகராறு செய்வதும், ரோட்டில் விழுந்து கிடப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இதனால் மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அப்பகுதியில் பல்வேறு கோவில்களும் உள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மூடவுள்ளதாக அறிவித்துள்ள 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியலில் இந்த இரண்டு கடைகளையும் சேர்த்து உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.