கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் உள்ளிட்ட தூய்மை பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினார். குப்பை பிரித்தெடுக்கும் பணியையும் ஆய்வு செய்தார்.


Coimbatore: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் பல்வேறு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



பீளமேடு பெரியார் வீதி பகுதியில் சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. இதை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலையோரத்தில் உள்ள குப்பைகள் தினசரி முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினார்.





அதேபோல, பீளமேடு கணக்குப்பிள்ளை வீதி பகுதியில் சாலையோரத்தில் குவிந்திருந்த சாக்கடை மண்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியையும் கவுன்சிலர் நேரில் ஆய்வு செய்தார். சாக்கடை மண்கள் முழுமையாக அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்தார்.





மேலும், பீளமேடு பாரதி காலனி ஐந்தாவது வீதி பகுதியில் ஏற்பட்டிருந்த சாக்கடை அடைப்பை ஏர் கம்ப்ரசர் லாரி மூலம் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதையும் கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். சாக்கடை அடைப்பை முழுமையாக சரி செய்து மக்களுக்கு நிவாரணம் அளிக்குமாறு தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி பிரிந்தார் உடன் இருந்தார்.





பீளமேடு சாய்பாபா கோயில் அருகில் தினசரி குப்பை சேகரிக்கும் ஆட்டோ சரியாக வருகிறதா என்பதை கவுன்சிலர் நேரில் சென்று ஆய்வு செய்தார். குப்பை சேகரிப்பு பணி சரிவர நடைபெறுவதை உறுதி செய்தார். மக்களிடம் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என குப்பைகளை பிரித்து தருமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த ஆய்வில் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார்.

வார்டு 27 பீளமேடு பகுதியில் தூய்மை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குடியிருப்போரின் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் கவுன்சிலர் அம்பிகா தனபால் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...