அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பாராட்டியுள்ளார்.


கோவை: பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மூலம் 237 அம்மா உணவகங்களும் என மொத்தம் 620 அம்மா உணவகங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

ஏழை எளிய மக்களின் பசியை ஆற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை பொதுமக்களுக்கு வழங்க தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், சமீப காலங்களில் அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்பது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, உரிய அரசுத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், அம்மா உணவகங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்யவும், சுவையுடன் கூடிய தரமான உணவுகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.

மேலும், இந்த மறுசீரமைப்பு பணிகள் மற்றும் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான செலவுகளை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஏழை எளியோரின் பசியைப் போக்க, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கரங்களால் தமிழ்நாடு முழுவதும் திறந்து வைக்கப்பட்ட 620 அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைத்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...