நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி கொலை செய்ததாக ஒருவர் போலீசில் சரணடைந்துள்ளார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Coimbatore: கோவை நீலாம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அச்சங்குளம் அருகே ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த 18ஆம் தேதி காலை சுமார் 8 மணியளவில், முந்தைய இரவு அச்சங்குளம் பகுதியில் மீன்பிடிக்க சென்றிருந்த தம்பதியினர் தங்களது வலைகளை எடுக்க மீண்டும் அங்கு சென்றுள்ளனர். அப்போது, கப்பினி தோட்டம் அருகே உள்ள இட்டேரி வருவாய் நிலப்பகுதியில் ஆடையின்றி முகம், தலை மற்றும் கால்களில் ரத்தக் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் நீலாம்பூர் கிராம உதவியாளர் பாலமுரளிக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் துர்கா அளித்த புகாரின் பேரில், நீலாம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில், சம்பவம் நடைபெற்ற 17ஆம் தேதி இரவு சுமார் 8.45 மணியளவில், சம்பவ இடம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சிலர், இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் தங்களுக்குள் தகராறு செய்து சத்தமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். அவர்கள் டார்ச் லைட் அடித்து விசாரித்தபோது, குடும்ப பிரச்சினை குறித்து பேசிக் கொண்டிருப்பதாக கூறியதால் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், கோகுல் (25) என்பவர் நேற்று மாலை நீலாம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தானும், மற்றொரு நபரான ஹரிஷும், உயிரிழந்த சரவணனும் AG புதூரில் உள்ள லைஃப் கண்டெய்னர் சிலிண்டர் நிறுவனத்தில் கூலித்தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்ததாக தெரியவந்தது.

மூவரும் சம்பவ இடத்திற்கு மது அருந்தச் சென்றபோது ஏற்பட்ட தகராறில், சரவணனை கற்களால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த வரதராஜன் மகன் சரவணன் (41) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சரணடைந்த கோகுலை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஹரிஷை தேடி வருகின்றனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...