பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.


கோவை: வரும் 28ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அறுவைக் கூடங்களில் மட்டுமே மாடுகள் பலியிட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் சூர்யா இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின்படி, பொது இடங்களில் கால்நடைகளை வதை செய்வது சட்டவிரோதம் என்பதால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. 

மேலும், சென்னை, கோவையின் பல்வேறு பகுதிகளில் பொது இடங்களிலும் விதிகளை மீறி மாடுகள் வெட்டப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இந்தாண்டு பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது, தற்காலிக செட்கள் அமைக்கக்கூடாது, அங்கீகரிக்கப்பட்ட அறுவைக் கூடங்களில் மட்டும் காளை மாடுகள் பலியிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., கோவை மாவட்ட ஆட்சியாளர், காவல் ஆணையாளர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் செல்வபுரம் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் வரும் 27ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து வழக்கு மீண்டும் 27ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...