“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்துள்ளனர்.


கோவை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கோவை மாநகருக்குள் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட சுமார் 10 கிலோ கஞ்சா போதைப்பொருளை Coimbatore City Prohibition Enforcement Wing போலீசார் நள்ளிரவு வாகன சோதனையில் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்துள்ளனர்.



போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சுங்கம் – ராமநாதபுரம் ரவுண்டானா பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது TN 34 AF 8910 என்ற பதிவு எண் கொண்ட ஐஷர் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், பொருட்கள் ஏற்றுமிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, லாரியில் இருந்த கோவை பீளமேட்டைச் சேர்ந்த மணிகண்டன் (29) மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் அருண்குமார் (30) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், மணிகண்டன் ஏற்கனவே E3 சரவணம்பட்டி காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி (HS 01/2021) என்பது தெரியவந்தது.

மேலும், ஆந்திராவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி, கோவையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தது விசாரணையில் அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து போலீசார் குற்ற எண் 106/2026-ன் கீழ் NDPS சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...