திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் நடைபெற்று வந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்குவது மற்றும் பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என விக்னேஷ் உறுதியளித்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை மாற்று ஊழியர்கள் மூலம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை 15 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக நாளை முதல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 197 டாஸ்மாக் கடைகளும் வழக்கம்போல் திறந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அரசு வழங்கியுள்ள கால அவகாசத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டு குழு ஆலோசித்து முடிவு செய்யும் என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...