கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது. 12,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய கிளையில் ஒரே நேரத்தில் 220 பேர் அமர்ந்து உணவருந்தும் வசதியுடன், இனிப்பு மற்றும் பேக்கரி பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவையின் பெருமையான ஸ்ரீ அன்னபூர்ணா உணவக நிறுவனம் தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் வியாழக்கிழமை (28.05.2026) திறந்தது.

மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.எஸ். சதீஷ்குமார் புதிய கிளையை திறந்து வைத்தார். முதல் தளத்தை கோவை மாவட்ட ஹோட்டலியர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் அன்னலட்சுமி உணவகத்தின் நிர்வாக இயக்குநர் ராமசாமி, ஹரிபவனம் உணவகத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். பாலசந்தர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டி. சீனிவாசன், இணை நிர்வாக இயக்குநர் ஆர். வெங்கடேஷ், தலைமைச் செயல் அதிகாரி ஜெகன் எஸ் தாமோதரசாமி மற்றும் எக்ஸிகியூட்டிவ் இயக்குநர் விவேக் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

12,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த கிளையில் பிரத்யேக டைனிங் ஹால், இனிப்பு மற்றும் பேக்கரி பிரிவு, விசாலமான வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தரைத்தள டைனிங் ஹாலில் ஒரே நேரத்தில் 220 பேர் அமர்ந்து உணவருந்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கிளையின் முதல் விற்பனையை எஸ்கேயம் (SKM) குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சிவகுமார் தொடங்கி வைத்தார். அதை அவன்யூ குழுமத்தின் தலைவர் எம்.எஸ். குமரன் பெற்றுக்கொண்டார்.

மேலும், இனிப்பு மற்றும் பேக்கரி பிரிவில் 100-க்கும் மேற்பட்ட இனிப்பு வகைகள், 25-க்கும் அதிகமான கார வகைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பேக்கரி உணவுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

100 கார்கள் நிறுத்தும் வசதியுடன் கூடிய வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அன்னபூர்ணா குழும ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...