தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்திச் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணிகள், குறிப்பாக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.


Coimbatore: கோவை விமான நிலையத்திற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் வருகை தரும் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான பயணிகள் அவதிப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக முதியோர், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலைய நுழைவாயில் மற்றும் வளாகப் பகுதிகளில் மொத்தம் 600 கார்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் சமயங்களில் வாகனங்கள் விதிமீறி நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ஏற்கனவே இடப்பற்றாக்குறை பிரச்சினை நிலவி வரும் கோவை விமான நிலையத்தில், அரசியல் கட்சி பிரமுகர்கள் வருகையின் போது நிலைமை மேலும் மோசமடைகிறது. நுழைவாயிலில் மூன்று லேன்கள் இருந்தபோதிலும், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது என தெரிவித்தனர்.

இன்று வியாழக்கிழமை காலை 11.30 மணி முதல் 11.50 மணி வரை சென்னை, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து மூன்று விமானங்கள் அடுத்தடுத்து தரையிறங்கிய நிலையில், 300-க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேறிய நேரத்தில், அரசியல் பிரமுகரை வரவேற்க வந்த வாகனங்களால் நுழைவாயில் பகுதி முழுவதும் கடும் நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் நீண்ட நேரம் சிக்கித் தவித்ததுடன், முதியோர் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியதாகவும் பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்த பிரச்சினை தொடர்கதையாக மாறிவிட்ட நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காண விமான நிலைய நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆலோசித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...