+2 பொதுத்தேர்வில் ஆயிரத்து நூறு மதிப்பெண் கிடைக்காத விரக்தியில் மாணவி தற்கொலை

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் தாமரைச்செல்வி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.

பொதுத்தேர்வில் ஆயிரத்து நூறு மதிப்பெண் கிடைக்கும் என்று தாமரைச்செல்வி எதிர்பார்த்திருந்தார்.

இந்நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. அதில் தாமரைச்செல்வி தான் எதிர்பார்த்ததை விட 12 மதிப்பெண்கள் குறைவாக எடுத்து ஆயிரத்து 88 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தேர்வில் தான் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண் பெற்றதால் தாமரைச்செல்வி மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த செட்டிபாளையம் போலீசார், சம்பவ இடதிற்கு சென்று தாமரைச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்பார்த்ததை விட 12 மதிப்பெண்கள் குறைந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...