கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் நேரடியாகச் சென்று குடிநீர் விநியோக செயல்பாடுகளை ஆய்வு செய்தார். உதவி பொறியாளர் ராஜேஸ் வேணுகோபால் உடன் இருந்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் விநியோக செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையர்மா. சிவகுரு பிரபாகரன் இன்று நேரடி ஆய்வு மேற்கொண்டார்.






கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியின் மூலமாக பொதுமக்களுக்கு சீரான இடைவெளியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விநியோக செயல்பாடுகளை நேரடியாகச் சென்று ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.






ஆய்வின்போது, மேல்நிலை நீர்த்தேக்கத்தின் செயல்பாடு, குடிநீர் விநியோக அட்டவணை, தண்ணீர் விநியோகத்தின் தரம் மற்றும் பொதுமக்களுக்கு சீரான முறையில் தண்ணீர் கிடைக்கிறதா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.




இந்த ஆய்வில் உதவி பொறியாளர் ராஜேஸ் வேணுகோபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர். குடிநீர் விநியோகத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக நிவர்த்தி செய்ய ஆணையர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...