கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கல்கி நகர், கோபால் நகர், ஜெகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர தூய்மை, சாக்கடை பராமரிப்பு ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் கேட்டறியப்பட்டன.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி, கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் தூய்மைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரடியாகப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தூய்மைப் பணிகளை ஆய்வு செய்தார்.



கல்கி நகர் பகுதியில் சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சாலை ஓரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மைப் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.




அவிநாசி பிரதான சாலையில் ஸ்ரீ திருப்பதி வெங்கடாஜலபதி நகர் முதல் மணல் பாலம் வரையிலான பகுதிகளில் சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் மண்கள் அகற்றப்பட்டன. இப்பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் ஆய்வு செய்தார். சாலை ஓரத்தில் உள்ள குப்பைகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.




கோபால் நகர் பகுதியில் சாலையோரத்தில் தேங்கியிருந்த சாக்கடை மண்கள் மற்றும் குப்பைகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாக்கடை மண்கள் மற்றும் குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தூய்மைப் பணியாளர்களிடம் வலியுறுத்தினார்.




ஜெகநாதபுரம் பகுதியில் தினசரி குப்பை வாங்கும் பேட்டரி ஆட்டோ சரியாக வருகிறதா என்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் பல்வேறு குடிமைச் சேவைகள் குறித்து விசாரித்தார். தினசரி உப்பு தண்ணீர் சரியாக வருகிறதா, நல்ல தண்ணீர் ஆறு நாட்களுக்கு ஒரு முறை சரியாக வருகிறதா, சாக்கடை சரியாக சுத்தம் செய்யப்படுகிறதா, தெருவிளக்கு சரியாக எரிகிறதா, கொசு புகை மருந்து வாரத்துக்கு ஒரு முறை அடிக்கப்படுகிறதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...