சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகியோர் கண்டெடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இழந்த பணத்தை இரும்பு கடை உரிமையாளர் தானாராமிடம் திரும்ப வழங்கிய காவல்துறை, நேர்மையான இருவருக்கும் பாராட்டு தெரிவித்து பொன்னாடை அணிவித்து கெளரவித்தது.


Tiruppur: திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மதன், சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை கண்டெடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்ததற்காக துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் உள்ளிட்ட காவல் துறையினரால் பாராட்டப்பட்டார்.






வளர்மதி ஆட்டோ ஸ்டாண்டில் பணிபுரியும் மதன், இன்று காலை தனது உறவினர் பிரபுவை அழைத்துக்கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட் செல்லும் வழியில், வளம் பாலம் பகுதியில் கீழே கிடந்த பிங்க் நிற பையை கவனித்தார். அதை எடுத்து பார்த்தபோது உள்ளே கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. உடனடியாக இருவரும் திருப்பூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமாரிடம் பணப்பையை ஒப்படைத்தனர்.






காவல்துறையினர் பையை சோதனை செய்தபோது ₹5,64,000 இருந்தது உறுதியானது. அதே சமயம், ராஜஸ்தானைச் சேர்ந்த தானாராம் என்பவர் திருப்பூர் வளம் சாலையில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் இன்று காலை தனது கடையிலிருந்து வங்கியில் செலுத்த ₹5.64 லட்சம் எடுத்துச் சென்றபோது, இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் மாட்டியிருந்த பை கீழே விழுந்துவிட்டதாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.




பையில் இருந்த அடையாளங்கள் மற்றும் பணம் உறுதி செய்யப்பட்ட பின்னர், காவல்துறையினர் தானாராமிடம் பணத்தை திரும்ப ஒப்படைத்தனர். துணை ஆணையர் தீபாசத்யன் மற்றும் உதவி ஆணையர் ஜான் உள்ளிட்ட காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் பிரபு ஆகிய இருவருக்கும் பாராட்டுகள் தெரிவித்தனர்.




மேலும் துணை ஆணையர் தீபாசத்யன், மதன் மற்றும் பிரபு இருவருக்கும் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கெளரவித்தார். "ஒவ்வொரு குடிமகனும் இதே போல பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பணம் இழந்தவர்கள் துயரப்பட்ட நிலையில், இரண்டு நல்ல மனங்கள் பணத்தை கண்டெடுத்து திரும்ப ஒப்படைத்தனர். அதேபோல் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்" என துணை ஆணையர் தீபாசத்யன் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...