சாமி கும்பிடுவது போல் நடித்து வைசியாள் வீதி கோவிலில் தங்க நகைகள் திருட்டு: ஒருவர் கைது

கோவை வைசியாள் வீதியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், பக்தர் போல் நுழைந்த நபர் ஒருவர் வள்ளி மற்றும் தெய்வானை சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த 12 கிராம் தங்கச் சங்கிலிகளை திருடிய சம்பவத்தில், சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் பெரிய கடை வீதி போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை வைசியாள் வீதியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் அம்மன் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 12 கிராம் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இக்கோவிலில் கடந்த 12 ஆண்டுகளாக நரசிம்மர் (61) என்பவர் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை வழக்கம்போல் கோவிலைத் திறந்து பூஜைப் பணிகளில் ஈடுபட்டிருந்த அவர், காலை 7.20 மணி அளவில் வள்ளி மற்றும் தெய்வானை சிலைகளுக்கு பூஜை செய்வதற்காக சென்றபோது, சிலைகளின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தலா 6 கிராம் எடையுடைய இரண்டு தங்கச் சங்கிலிகள் மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அணிந்திருந்த ஒருவர், பக்தர் போல கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடுவது போல் நடித்து, சிலைகளில் இருந்த தங்கச் சங்கிலிகளை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.

இதையடுத்து கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் கடை வீதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், டவுன்ஹால் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமாரின் மகன் செந்தில்பிரபு (45) என்பவரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவிலில் பக்தர் போல நடித்து தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...