இந்து மதத்தையும், பெண்கள் சமூகத்தையும் இழிவாக பேசும் கிருத்துவ போதகர் மீது நடவடிக்கை கோரி அகோரிகள் போராட்டம்

கோவையில் இந்து மதத்தையும், இந்து மத பெண்களையும், காசி அகோரிகளையும் இழிவுப்படுத்தி கிருத்துவ போதகர் பேசுவதாகவும், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தை தடை செய்யக்கோரியும், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உடுக்கை அடித்தும், சங்கு ஊதியும் அகோரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கிறித்துவ மத போதகர் ஆண்டர்சன். இவர், வெளியிட்டு வரும் யெகோவா-யீரே-ன் குமுறலின் சத்தம் என்ற ஜெப குறிப்பு புத்தகங்களில் தொடர்ந்து இந்து மத பெண்களை இழிவுப்படுத்தி வந்ததாகவும், காசி அகோரிகளை பிணம் திண்பவர்கள் என இழிவுப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் குமுறலின் சத்தம் புத்தகத்தை தடை செய்யவும், எழுதிய ஆண்டர்சனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் கைது செய்யக்கோரியும், காசி அகோரிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.



அப்போது சங்கு ஊதியும், உடுக்கை அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட அகோரிகள், இந்து மத பெண்களையும், அகோரிகளை பிணம் திண்ணும் பேய்கள் என இழிவுபடுத்திய புத்தகத்தை தடை செய்ய வேண்டுமெனவும், அப்புத்தகத்தை வெளியிட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், பெண் வடுகொடுமை தடுப்பு சட்டத்திலும் கைது செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

மேலும், நடவடிக்கை எடுக்கத்தவறினால் காசியில் இருந்து நிர்வாண அகோரிகளை வரவழைத்து போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...