வால்பாறையில் காட்டுயானை தாக்கி காவலாளி பலி



வால்பாறை அடுத்துள்ள முருகாளி எஸ்டேட்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் பாபு (50).  இவர் வழக்கம் போல் நேற்று இரவு எஸ்டேட் மருத்துவமனை அருகாமையில் உள்ள மருத்துவர் குடியிருப்பில் காவல் பணியில் இருந்தபோது நள்ளிரவில் ஒற்றை யானை ஒன்று மெயின் கேட் வழியாக உள்ளே நுழைந்து பாபுவை தாக்கியுள்ளது. 



இதனிடையே, அங்கிருந்த மருத்துவர் யானையின் அழறல் சத்தத்தைக் கேட்டு பயத்தில் வீட்டின் உள்ளேயே இருந்துள்ளார். தொடர்ந்து, மருத்துவர் கைபேசியில் அழைப்பு விடுத்த போது பாபுவின் கைபேசி செயல் இழந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, மருத்துவர் அதிகாலையில் வெளியே வந்து பார்த்த போது காலாளி பாபுவைக் காணவில்லை. வீட்டியின் அருகாமையில் இரத்தக்கறை இருப்பதை கண்டவுடன் பொதுமக்கள் உதவியுடன் தேடி பார்த்தபோது அருகாமையில் உள்ள பல்லத்தில் பாபு உடல் முழுவதும் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.



இதுகுறித்து காவல்துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுக்கபட்டதைத் தொடர்ந்து, ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் காவல்துறையினர் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

மேலும், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, முருகாளி எஸ்டேட் தொழிலாளர்கள் வனவிலங்குகளிடம் இருந்து தங்கள் உடமைக்கும், உயிருக்கும் நிரந்தரமான பாதுகாப்பு வழங்க எஸ்டேட் நிறுவாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...