நீலகிரிக்கு உட்பட்ட கூடலூர் பேரூராட்சியில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை ஆய்வாளர் பரசிவம் மற்றும் பிட்டர் மகாதேவன் ஆகியோர் தரகுறைவாக நடத்துவதாக துப்புரவு பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த 300 ரூபாய் கூலியை வழங்காமலும், பணியில் உள்ள துப்புரவாளர்களை உயிரிழந்துவிட்டதாகவும் பதிவேட்டில் ஆய்வாளர் பரமசிவம் பதிந்துள்ளார்.

இதனால், அவேசமடைந்த கூடலூர் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துடைப்பம் மற்றும் சாக்கடை தூர் வாரும் பொருட்களுடன் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவினையும் துப்புரவு தொழிலாளர்கள் வழங்கினர்.

இதனால், அவேசமடைந்த கூடலூர் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துடைப்பம் மற்றும் சாக்கடை தூர் வாரும் பொருட்களுடன் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவினையும் துப்புரவு தொழிலாளர்கள் வழங்கினர்.