கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் 1.435 கிலோ கஞ்சா மற்றும் ரூ.4,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மத்திய ரயில் நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, ரேஸ் கோர்ஸ் போலீசார் சோதனை நடத்தி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

ரேஸ் கோர்ஸ் போலீசாருக்கு கோவை மத்திய ரயில் நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா தலைமையிலான போலீசார் குழு நேற்று காலை அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது, சந்தேகப்படும் வகையில் பையுடன் நின்றிருந்த ஒரு இளைஞரை போலீசார் சோதனைக்கு உட்படுத்தினர். அவரது பையில் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசாரின் விசாரணையில், கைது செய்யப்பட்டவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (30) என்பதும், தற்போது பொள்ளாச்சி குளக்கப்பாளையம் பகுதியில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரிடம் இருந்து 1.435 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் ரூ.4,500 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...