கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு புதிய நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையத்தை மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில், பொள்ளாச்சி எம்.பி. கே. ஈஸ்வரசாமி திறந்து வைத்தார்.
கோவை: கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு புதிய நியாயவிலைக் கடைகள் மற்றும் ஒரு புதிய அங்கன்வாடி மையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தெற்கு மண்டலம், வார்டு எண் 91-இல் உள்ள சுகுணாபுரம் மேற்கு கல்கி கார்டன் பகுதியில், எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை, மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடை பொருட்களும் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம், வார்டு எண் 73-இல் உள்ள பொன்னையராஜபுரம் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மற்றொரு நியாயவிலைக் கடையும், வார்டு எண் 72-இல் உள்ள அருணாசலம் வீதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையமும் திறந்து வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.57 லட்சம் மதிப்பிலான இந்த மூன்று திட்டங்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் துணை மேயர் ரா. வெற்றிச்செல்வன், மேற்கு மண்டலத் தலைவர் தெய்வானை தமிழ்மறை, நகரமைப்புக் குழுத் தலைவர் சந்தோஷ், உதவி ஆணையர்கள் டட்சிணாமூர்த்தி (தெற்கு), நர்மதா (மேற்கு), மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தெற்கு மண்டலம், வார்டு எண் 91-இல் உள்ள சுகுணாபுரம் மேற்கு கல்கி கார்டன் பகுதியில், எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை, மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடை பொருட்களும் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம், வார்டு எண் 73-இல் உள்ள பொன்னையராஜபுரம் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மற்றொரு நியாயவிலைக் கடையும், வார்டு எண் 72-இல் உள்ள அருணாசலம் வீதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையமும் திறந்து வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.57 லட்சம் மதிப்பிலான இந்த மூன்று திட்டங்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் துணை மேயர் ரா. வெற்றிச்செல்வன், மேற்கு மண்டலத் தலைவர் தெய்வானை தமிழ்மறை, நகரமைப்புக் குழுத் தலைவர் சந்தோஷ், உதவி ஆணையர்கள் டட்சிணாமூர்த்தி (தெற்கு), நர்மதா (மேற்கு), மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.