கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி பதவி விலக கோரி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
Coimbatore: தமிழக வெற்றிக்கழக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரத்தில் அவர் பதவி விலக வேண்டும் என கோரி கோவை, துடியலூர் அருகே திமுக மாணவர் அணி சார்பில் வெள்ளிக்கிழமை பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட திமுக ஆர்வலர்களை துடியலூர் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சரத்குமார் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து பவுடர் போன்ற ஒரு பொருளை தனது மொபைல் போனின் மீது வைத்து பொடியாக்கிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அது போதைப்பொருள் என பலரும் சமூக வலைதளத்தில் கூறி விமர்சனங்கள் கிளம்பின. இதையடுத்து அமைச்சர் சரத்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீடியோ வெளியிட்டு, குழந்தைக்கான மாத்திரையை பொடி செய்த வீடியோ என விளக்கம் அளித்தார்.

எனினும் இந்த விவகாரத்தை DMK கடுமையாக கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக Coimbatore துடியலூர் அருகே NGGO காலனி பகுதியில் DMK மாணவர் அணி மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் DMK மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர், மாணவர் அணியினர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் "அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும்" என கோஷங்களை எழுப்பினர். மேலும் தமிழக வெற்றி கழகம் அரசிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆர்ப்பாட்டம் அனுமதியின்றி நடத்தப்பட்டதால், துடியலூர் போலீசார் DMK ஆர்வலர்கள் 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை வாகனங்களில் ஏற்றி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இந்த கைது நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. DMK தொடர்ந்து மாநிலம் முழுவதும் இதே போன்ற ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சரத்குமார் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து பவுடர் போன்ற ஒரு பொருளை தனது மொபைல் போனின் மீது வைத்து பொடியாக்கிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அது போதைப்பொருள் என பலரும் சமூக வலைதளத்தில் கூறி விமர்சனங்கள் கிளம்பின. இதையடுத்து அமைச்சர் சரத்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீடியோ வெளியிட்டு, குழந்தைக்கான மாத்திரையை பொடி செய்த வீடியோ என விளக்கம் அளித்தார்.
எனினும் இந்த விவகாரத்தை DMK கடுமையாக கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக Coimbatore துடியலூர் அருகே NGGO காலனி பகுதியில் DMK மாணவர் அணி மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் DMK மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர், மாணவர் அணியினர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் "அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும்" என கோஷங்களை எழுப்பினர். மேலும் தமிழக வெற்றி கழகம் அரசிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆர்ப்பாட்டம் அனுமதியின்றி நடத்தப்பட்டதால், துடியலூர் போலீசார் DMK ஆர்வலர்கள் 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை வாகனங்களில் ஏற்றி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இந்த கைது நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. DMK தொடர்ந்து மாநிலம் முழுவதும் இதே போன்ற ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.