இந்தி திணிப்பு, நீட் தேர்வு ஆகியவற்றைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மத்திய அரசின் நீட் தேர்வு மற்றும் இந்தி திணிப்பு நடவடிக்கை ஆகியவற்றைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திமுக மாநில மாணவர் அணி செயலாளர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர்  பழனிச்சாமி, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கை மற்றும் நீட் தேர்வு ஆகியவற்றிக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது.



பின்னர், பேட்டியளித்த மாணவர் அணி செயலாளார் புகழேந்தி கூறுகையில், நீட் தேர்வின் மூலம் வடமாநில மாணவர்களை  மருத்துவ படிப்பில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வு போன்ற  நடவடிக்கைகளால் இந்தியா உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த சர்வாதிகார போக்கு காரணமாக பாதிக்கப்படும் இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று திரண்டு கிளர்ச்சி செய்ய வாய்ப்பிருக்கின்றது" என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவரணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...